பதிவு செய்த நாள்
15
டிச
2017
12:12
ராசிபுரம்: ராசிபுரம், ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 17ல், ஜெயந்தி விழா நடக்கவுள்ளது. ராசிபுரத்தில் இருந்து, சேலம் செல்லும் சாலையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, வரும், 16 காலை, 9:00 மணிக்கு, மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. மாலை, 5:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா வருதல் நடக்கிறது. மறுநாள் காலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு, மஹா தீபராதனையுடன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் ஆய்வாளர் செல்வி செய்து வருகின்றனர்.