பதிவு செய்த நாள்
16
டிச
2017
10:12
புதுடெல்லி: கங்கை நதிக்கரையோர நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன் பாட்டிற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
ஹிந்துக்களின் புனிதமான, கங்கை நதி மாசடைந்து வருவதை தடுக்கவும், நதியை தூய்மை ப்படுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக, மத்திய அரசில், தனி அமைச்சரவையே உருவாக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள ப்படுகின்றன.
இந்நிலையில், டில்லியில் செயல்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சுற்றுச்சுழல் ஆர்வலர், எம்.சி.மேத்தா விடுத்த கோரிக்கையை அடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தடையை மீறி பயன் படுத்துவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், ""விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், ""என, பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஸ்வந்திர குமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன்னரும், கங்கை நதிக்கரை நகரங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, பசுமை தீர்ப்பா யம் தடை விதித்திருந்தது.
ஆனால், அந்த உத்தரவு, முழு அளவில் பின்பற்றப்படவில்லை. மாசு அதிகரித்ததை அடுத்து, அபராதம் விதித்தது, இந்த முறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கங்கை நதிக்கரையில், பிளாஸ்டிக் மாசு படிப்படியாக குறையும் என, எதிர் பார்க்கப்படுகிறது.