சோழவந்தான்: சோழவந்தான் அரசு பஸ் பணிமனை அருகே பழமையான ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு, நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை நடக்கிறது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார தரிசனம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை அர்ச்சகர் சிதம்பரம் செய்து வருகிறார்.