திருநள்ளார் நளம் குளத்தில் பக்தர்கள் போடும் துணிகளைஉடனுக்குடன் அப்புறப்படுத்தும் ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2017 06:12
காரைக்கால்: திருநள்ளார் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளம் குளத்தில் குளித்துவிட்டு செல்லும் துணிகளை உடனுக்குடன் ஊழியர்கள் அப்புறப்படுத்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு வரும் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் லட்சக்கனக்கன பக்தர்கள் திருள்ளார் சனிபகவான் கோவிலுக்கு வருகின்றனர்.
சனிஸ்வர பகவானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முன்னதாக நளன்குளத்தில் நீராடி விட்டு தங்களது அணிந்த துணிகளை குளத்திலேயே கழற்றி விட்டு, புதிய அடை அணிந்து கோவிலு க்கு செல்கின்றனர்.16ம் தேதி சனிப்பெயர்ச்சி முதல் சனி என்பதால் லட்சசத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை நளன்குளத்தில் குளித்தனர். பக்தர்கள் விட்டு சென்ற துணிகள் மூட்டை மூட்டையாக குவிந்தது.இதை கோவில் தேவஸ்தான ஊழியர்கள் உடனுக் குடன் துணிகளை அப்புறப்படுத்தில் நளம் குளத்தில் சுற்றியுள்ள குப்பைகளை தூய்மைப்ப டுத்தி வருகின்றனர்.