குச்சனூர் கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு : நாளை சனிப்பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2017 03:12
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் லட்சார்ச்சனை இன்று நிறைவடைகிறது. நாளை காலை 9:59 மணிக்கு விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு சனிபெயர்ச்சியாவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
குச்சனுார் சனிபகவான் கோயிலில் சனிபெயர்ச்சியையொட்டி டிச., 9ல் லட்சார்ச்சனை துவங்கியது. நாள்தோறும் பத்தாயிரம் மந்திரங்கள் வீதம் உற்ஸவருக்கு செய்யப் பட்டு வருகிறது. இன்றுடன் லட்சார்ச்சனை நிறைவடைகிறது. இங்கு நடைபெறும் பரிகார பூஜைக்காக மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அறநிலையத்துறை கோயில்களில் முன்பதிவு செய்யப்பட்டது.பதிவு செய்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் நேரடியாக லட்சார்ச்சனையில் பங்கேற்றவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு சனிபெயர்ச்சி முடிந்த பின் பிரசாதம் தபாலில் அனுப்ப கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சியாகிறார். அந்த நேரத்தில் குச்சனுார் கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் சுரபி நதியில் நீராடவும், தரிசனம் செய்ய வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசுமை கழிப்பறையுடன் கூடிய தற்காலிக பஸ் நிறுத்தம், கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.