பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
நகரி : காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், 16 நாட்களில், பக்தர்கள், 58 லட்சம் ரூபாயை, காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.கோவில் அதிகாரி, பூர்ணசந்திர ராவ் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், 16 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணினர்.இதில், 57 லட்சத்து, 79 ஆயிரத்து, 953 ரூபாய் ரொக்கம்; 34 கிராம் தங்கம்; 280 கிராம் வெள்ளி; 480 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.