மேலுார்;மேலுார் சுந்தரராசன்பட்டியில் மூலிகை கலந்த மண்ணில் பொங்கல் பானைகள் தயாரித்து விற்பதால் விற்பனை களை கட்ட ஆரம்பித்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக பானைகளை செய்யும் நல்லையன் கூறியதாவது: அழகர்கோவில் மலையில் இருந்து வரக்கூடிய மூலிகை தண்ணீர் தேங்கும் கண்மாயில் இருந்து மணலை சேகரித்து செய்வதால் இப்பானைகளுக்கு மவுசு அதிகம். மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு அளவுகளில் பொங்கல் பானைகளை தயாரித்து 45 - 70 ரூபாய் வரை விற்கிறோம். பிற நாட்களில் சமைக்க, பருக என அனைத்து மண்பானைகளும் தயாரிக்கிறோம். காரைக்குடி, தேவகோட்டை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வதால் பொங்கல் விற்பனை களை கட்ட ஆரம்பித்துள்ளது, என்றார்.