சிவகங்கை: கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உபகோயிலாக உள்ளது. இக்கோயிலில் டிச., 29 காலை 6:00 க்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பும், காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடக்கும். தொடர்ந்து தீபாராதனை, தீர்த்த கோஷ்டி நடக்கும். மாலை 4:35 முதல் 5:30 மணி வரை பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.சேவார்த்திகள் பெருமாளை சேவிக்க ஏதுவாக கோயில் அதிகாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை நடை திறந்திருக்கும் என, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.