Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சண்முகநதியில் உவ்வே.. நீராடும் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி வழிபாடு திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் மார்கழி ஏழாம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் மார்கழி ஏழாம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

21 டிச
2017
12:12

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, பழையபுதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நாளை காலை, திருப்பாவையின் ஏழாவது பாடலோடு, மார்கழி மாத ஏழாம் நாள் வழிபாடு துவங்குகிறது. பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து சுமார், 3 கி.மீ., தொலைவில் உள்ள பழையபுதுாரில், ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை, பெருமாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மகாராஜா, கோவை மண்டலம் வந்த போது, ஆதிமூர்த்தி கோவிலை திறம்பட நிர்வாகம் செய்யவும், செலவுகளை எதிர்கொள்ளவும், நரசிம்மநாயக்கன்பாளையம் கவுசிகா நதி ஓரம் உள்ள நிலத்தை, தானமாக வழங்குவதாக தாமிர பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார். இச்சிறப்பு பெற்ற இக்கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு திருப்பாவை பாடலுடன், பெருமாள் வழிபாடு நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை காலை, 5:00 மணிக்கு, கீசு,கீசு என்றெங்கும் ஆனைத்சாத் தன் கலந்து… என்ற திருப்பாவையின் ஏழாவது பாடலை பெருமாள் பக்தர்கள் பாடுகின்றனர். இப்பாடலின் பொருள், கீச்சு கீச்சென்று குருவிகள் எழுப்பும் ஒலியை, இன்னும் நீ கேட்கவில்லையா? மணம் கமழும் பூக்களை சூடி, வளையல்கள் குலுங்க கைகளை முன்னும், பின்னும் மாறி, மாறி அசைத்து இடைச்சியர் தயிர் கடையும் ஓசையும் கேட்கவில்லையா? பெண்களின் தலைவியே! கேசவனை நாங்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டு, இன்னும் உறங்குகிறாயா? பேரழகுடையவளே! கதவை திற! என்பதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar