பதிவு செய்த நாள்
22
டிச
2017
11:12
தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜரின், 171வது ஆண்டு ஆராதனை விழா, ஜன., 2ல் துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தி, இசை அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இசை நிகழ்ச்சியில், கர்நாடகா சங்கீத இசைக்கலைஞர்கள் திரளாக பங்கேற்று இசை அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அதன்படி தியாகராஜரின், 171வது ஆண்டு ஆராதனை விழா, ஜன., 2ல் மாலை, 6:00 மணிக்கு திருவையாறு தியாகராஜர் சமாதியில் துவங்க உள்ளது. விழாவை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, 6ம் தேதி வரை காலை முதல் இரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜன., 6ம் தேதி காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, தியாகராஜருக்கு இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.