பதிவு செய்த நாள்
22
டிச
2017
11:12
அயோத்தி: உ.பி., மாநிலம், அயோத்தியில் உள்ள ஒரு கோவிலில், இறைவனுக்கு குளிரும் என்பதால், ஹீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வட மாநிலங்களில், குளிர் வாட்டத் துவங்கியதை அடுத்து, இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மக்கள், ஸ்வெட்டர், மப்ளருடன், வலம் வருகின்றனர். இந்நிலையில், அயோத்தியில் உள்ள, ஜானகி காட் பெரிய கோவிலில், ஹீட்டர் பயன்பாட்டை துவக்கி உள்ளனர். இந்த கோவிலில், ஸ்ரீராமர், சீதையுடன் வீற்றிருக்கிறார். இது குறித்து, கோவில் அர்ச்சகர், ஜன்மேஜய சரண் கூறுகையில், மாநிலத்தில், கடும் குளிர் நிலவுகிறது. கோவிலுக்குள்ளும், குளிர் காற்று வீசுவதால், இறைவனுக்கு குளிரும் என்பதால், ஹீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்ய திட்ட மிடப்பட்டு உள்ளது, என்றார்.