பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராகவபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. வரும், 29ல், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடக்கிறது. திருப்பூர், பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 18ம் தேதி, இரவு, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தினமும் காலை , 9:30 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு பூஜைகளுடன், பகல் பத்து உற்சவம், திருமொழி திருநாள் நடந்து வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று, பட்டாச்சார்யார்கள் திருப்பாவை பாசுரம் பாடி, சிறப்பு பூஜைகளை செய்தனர். அதன்பின்,மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 28ம் தேதி, காலை , 10:00 மணிக்கு, மோகினி அலங்காரம், ஸ்ரீ நாச்சியார் திருக்கோலத்துடன், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, வைகுண்ட ஏகாதசி வரும், 29ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை ,3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு, மகாஅபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில்,
எம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிதிருவீதியுலா காட்சி நடக்கிறது. அன்றையதினம், துவங்கி, தொடர்ந்து பத்து நாட்களுக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய்
மொழி திருநாள் உற்சவம் நடக்கிறது. ஜன.,7ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம், 11ம் தேதி, கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா மற்றும் மாலை, 6:00, சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடக்கிறது.