Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் பெருமாள் கோவிலில் பகல் ... பழநி முருகன் கோயிலில் முடிக்காணிக்கை மண்டபம் ‛ரெடி பழநி முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் வரும் 31ல் படித்திருவிழா
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் வரும் 31ல் படித்திருவிழா

பதிவு செய்த நாள்

22 டிச
2017
12:12

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழாவும்,1ம் தேதி புத்தாண்டு தரிசனமும் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டிற்கு, 365 நாட்கள் நினைவூட்டும் வகையில், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளும், 365 அமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி, முருகன் கோவிலில் திருப்படித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவின் போது பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும், 1,000க்கும் மேபட்ட பஜனை குழுவினர், பக்தி பாடல்கள் பாடிய வண்ணம் மலைக்கோவிலுக்கு சென்று, மூலவரை தரிசிப்பர். அந்த வகையில், வரும் 31ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, சரவணபொய்கை அருகே, முதல் படியில் சுவாமிநாதன் குருக்களால் பூஜை நடத்தி, முதல் பஜனை குழுவினரை வரவேற்று நிகழ்ச்சி துவங்கி வைக்கப்படும். தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மலைக்கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று இரவு முழுவதும், மலைக்கோவில் மற்றும் திருத்தணி நகரம் முழுவதும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும். ஜன., 1ம் தேதி புத்தாண்டு தரிசனம் மற்றும் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக,10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் திருநட்சத்திர ஜெயந்தி விழா ... மேலும்
 
temple news
மேலுார்; திருவாதவூர், திருமறைநாதர் , வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏப்.27 ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.மயிலாடுதுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar