ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: வைரஅபய ஹஸ்தம் அணிந்து நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2017 05:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாளில், சவுரி கொண்டை, வைரஅபய ஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், தங்க கிளி, பவள மாலை, முத்துமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.