பதிவு செய்த நாள்
23
டிச
2017
10:12
பழநி, சபரிமலை சீசன், மார்கழி மாதம், தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 14 நாட்களில் நிரம்பிய, உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்று எண்ணப்பட்டது.
இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 38லட்சத்து 54ஆயிரத்து 094, தங்கம் -540 கிராம், வெள்ளி- 5,130 கிராம், வெளிநாட்டு கரன்சி- 811 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.