சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகோயில் மார்கழி திருவிழா: நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2017 12:12
நாகர்கோவில்:சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள்பாலிக்கும் சிறப்பு பெற்றது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். இங்கு மார்கழி பெருந்திருவிழா நாளை காலை 7:30 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து எல்லா நாட்களிலும் காலையிலும், இரவிலும் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.26ம் தேதி இரவு 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமாலை குமாரசுவாமி, தனது தாய் தந்தை வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவருவது மக்கள்மார் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.2018 ஜன., ஒன்றாம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 12:00 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 2ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.