பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடந்த, கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியில், ஏராளமானோர் பங்கேற்றனர். கீழ்திசை நாடுகளின், லுார்து என்றழைக்கப்படும், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா விண்மின் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் முன்னிட்டு, சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிய திருப்பலி, நள்ளிரவு, 1:30 மணி வரை நடந்தது. தேவாலய அதிபர், பிரபாகர் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசுகிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் நடந்தது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். பக்தர்கள் வசதிக்காக, விரிவான ஏற்பாடுகளை, தேவாலய நிர்வாகம் செய்திருந்தது.