திருக்கோஷ்டியூரில் நாளை பரமபத வாசல் திறப்பு இரவு பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2017 02:12
திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை இரவுபரமபத வாசல் திறக்கப்படும். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நடைபெறும். பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு தினசரி காலையில்பதினொரு ஆழ்வார்களும் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளலும் நடைபெறுகிறது. தொடர்ந்து திவ்ய பிரபந்த கோஷ்டி,ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. இரவில் பெருமாள்,ஆண்டாள் சன்னதி மூலஸ்தானம்எழுந்தருளி வருகிறார். இன்றுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைகிறது. தொடர்ந்து நாளைகாலை 7:00 மணிக்குமூலவர் முன் மண்டபத்தில் சயனஅலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பார். இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு 10:30 மணிக்கு மேல் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பரமபத வாசலை கடந்தருளுவார். தொடர்ந்து இரவுப் பத்து உற்ஸவம் துவங்கும். தினசரி 7:30 மணிக்குபெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி பரமபத வாசல் திறக்கப்படும். பின்னர் தென்னை மரவீதி புறப்பாடு நடைபெறும்.ஜன.,8 வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.