பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
அரியலூர்: அரியலூர் அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, காமரசவல்லி கார்கோடேஸ்வரர் சிவன் கோவிலில் மகாருத்ர ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடந்தது.அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே காமரசவல்லி கிராமத்தில் பாலாம்பிகை சமேத ஸ்ரீ கார்கோடேஸ்வரர் சிவன் கே õவில் உள்ளது. 45 கல்வெட்டுகளுடன் திருநாவுக்கரசரின் வைப் பு தலங்களுள் 70வது தலமாக போற்றப்படும் இக்கோவில், ஆ யிரம் ஆண்டுக்கு முந்தைய சோ ழர் காலத்தில் கட்டப்பட்டது. மகாபாரத காலத்துக்குப் பிறகு பாண்டவர்களில் ஒருவராகிய அர்ச்சுணன் பேரன், பரிக்ஷத்து மகாராஜா ஒரு நாகம் தீண்டி இறந்து விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ஜனமேஜயன், நாகவம்சமே அழிய வேண்டும் என்பதற்காக கால சர்ப்ப யாகம் செய்தார். நாகங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து யாகத்தில் விழுந்து பொசுங்கியது.இதையடுத்து நாகங்களின் ராஜாவான கார்கோடகன், மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி, காமரசவல்லி ரதிவரபுரம் எனப்படும் இத்தலத்துக்கு வந்து, நாகவம்சம் காப்பாற்றப்பட வேண்டும் என, இறைவன் சவுந்தரரேஸ்வரரை வழிபட்டான்.அவனது பக்திக்கு இளகிய இறைவன், இங்கு வந்து வழிபடுவோருக்கு நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் அணுகாதிருக்க வேண்டும் என அருள் பாலித்ததுடன், இத்தலத்தில் வசிக்கும் யாரும் நாகம் தீண்டி இறக்காமல் இருக்க வேண்டும் என, கார்கோடனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு, அவனது கே õரிக்கையை நிறைவேற்றினார்.கார்க்கோடகனை தனது கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார் பரமசிவன். பாம்பு வம்சமே பிழைத்திருக்க காரணமான இத்தலம், கடக ராசியில் பிறந்தோருக்கு சிறப்பு பரிகார தலம் எனவும் கூறப்படுகிறது.காமனை சிவபெருமான் தன து கண்ணால் எரித்த பின், ரதிதேவி இத்தலத்து ஈசனையும் அம்பாளையும் வணங்கி, தனது மாங்கல்ய பாக்யத்துக்காக மனமுருகி வேண்டினார். அன்னை பாலாம்பிகையின் கருணையினால் காமன் மீண்டும் உயிர்த்தெழுந்த தலம் இந்த காமரசவல் லி. பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடவும் அவர்கள் மனமொன்றி குடும்பம் நடத்தவும், பெண்களின் மாங்கல்ய பலம் தழைக்கவும் சிறந்த பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. புராண பாரம்பரியம் மிகுந்த இக்கோவிலில், உலக நன்மையைக் கருதி, உலக மக்கள் யாவருக்கும் நாக, கால சர்ப்ப, சனி தோஷம் நீங்கும் பொருட்டு, க ணபதி ஹோமம் முதல் ஸ்ரீ மகா ருத்ர ஹோமம் வரையிலான யாகங்களை நடத்த கார்கோடே ஸ்வரர் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து பலநூறு ஆண்டுக்கு பிறகு, காமரசவல்லி ஸ்ரீ கார்கோடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் 17ம் தேதி மாலை துவங்கி, இரண்டு நாட்கள் மகா ருத்ர ஹோமம் நடந்தது. நேற்று நடந்த கோபூஜை, நவக்கிரஹ ஹோமம், அகோராஸ்த்ர ஹோமம், மஹாம்ருத்யுஞ்ச ஹோமம், நாகதோஷ பரிகார ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம் இவைகளுடன் ஸ்ரீ மகாருத்ர ஹோமமும் நடந்தது.கும்பகோணம் தினகர சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்திய மகாருத்ர ஹோமத்தில், பக்த பிரமுகர்கள் சென்னையை சேர்ந்த மகாலெக்ஷ்மி, ரகுநாதன், கார்கோடேஸ்வரர் கைங்கர்ய அறக்கட்டளை நிர்வாகிகள் சீனிவாசன், செந்தில், மருதமுத்து, மயிலாடுதுறை எம்.பி., மணியன், எம்.எல்.ஏ. ,க்கள் துரை மணிவேல், ரத்தினசாமி, திருமானூர் பஞ்., யூனியன் சேர்மன் சீனிவாசன், துணை சேர்மன் குமரேசன், காமரசவல்லி பஞ்சாயத்து தலைவர் சிவாலிங்கம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.