விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலில், மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் நாளில் காலை, 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து தங்கபல்லக்கில் எழுந்தருளிய ஆண்டாள், மாடவீதிகள் வழியாக, ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு அரையர்சேவை நடந்தது. , மார்கழி எண்ணெய்காப்பு உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று கள்ளழகர் அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜன., 15 வரை, மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் நடக்கிறது.