Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிரித்த முகத்தில் பெருமாள், சிதைந்த ... திருச்செந்தூரில் சுவாமி அய்யப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி ஜரூர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
10:12

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய முருகன் கோவில்களில், சென்னிமலை முருகன் கோவில் சிறப்பு பெற்று விளங்குகிறது. பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், இங்கு வந்து செல்கின்றனர். கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய இத்திருத்தல முருகனை, "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! என்று பாடினார் தேவராய ஸ்வாமிகள். செவ்வாய் கிழமை இரவு மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவர். இக்கோவிலில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் 2005ல் துவங்கியது. ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில், 146 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பஞ்சவர்ணம் பூசும் பணி விரைவில் துவங்க உள்ளது. கோவிலில் பல்வேறு திருப்பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. 45க்கும் மேற்பட்ட சிற்பிகள், கோவில் வளாகத்திலேயே தங்கி பணிபுரிகின்றனர். இதுதவிர, ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மார்க்கண்டேஸ்வரர், கன்னி மூலை கணபதி மற்றும் காசிவிஸ்வநாதர் சன்னதிகள் கட்டப்பட்டு, 95 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. ராசிபுரத்தில் உள்ள மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்களால், சோழர்கால சிற்பமுறையில், இம்மூன்று சன்னதிகளும் வடிவமைத்துள்ளனர். அதே போல் மூலவர் விமானம் புதுப்பிக்கும் பணி, ஆறு லட்சம் ரூபாய் செலவில் நிறைவு பெற்றுள்ளது. அதற்கும் வண்ணம் தீட்டும் பணி விரைவில் துவங்கும். மற்ற எந்த கோவிலிலும் இல்லாத புது மாதிரியாக, 80 லட்சம் ரூபாய் செலவில் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதை மேலும் அழகுபடுத்த சுவரின் மேற்பகுதியில், கருங்கற்களாலேயே பிரஸ்தரம் வடிவமைக்கப்படுகிறது. இப்பணிக்கு 36 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. திருப்பணி மிகுந்த சுறுசுறுப்புடன் நடந்து வருகிறது. எனினும், பல பணிகள் கருங்கற்களாலேயே செய்வதால் கூடுதல் நாள் பிடிக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் திருப்பணிகள் நிறைவு பெற அதிக வாய்ப்புள்ளது. சீக்கிரம் கும்பாபிஷேகம் காணும் ஆவலில் பக்தர்களும் காத்திருக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar