பதிவு செய்த நாள்
11
ஜன
2018
11:01
இளையான்குடி, இளையான்குடியில் உள்ள குயவர்பாளையத்தில்,பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இளையான்குடி, சாலைக்கிராமம் அருகில் உள்ள குயவர்பாளையத்தில், 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மண்பாண்டங்கள் செய்வது இவர்களின் முக்கியத்தொழிலாக விளங்குகிறது. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிக்க அவ்வூரில்உள்ள கண்மாயில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே மண்ணைதேர்வு செய்து அதை பயன்படுத்துகின்றனர். மண்பானை, மண்சட்டி, மண் அடுப்பு, உட்பட பல மண்பாண்டங்களை இவ்வூரில் தயார்செய்கின்றனர். வரக்கூடிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டுகுயவர்பாளையத்தில், பொங்கல் பானை தயாரிக்கும் பணிதீவிரமடைந்து வருகிறது.
அப்பகுதியை சேர்ந்த முனியாண்டி கூறுகையில்; சாலைக்கிராமத்தில் உள்ள குயவர்பாளையத்தின் முக்கியதொழிலாக மண்பாண்டம் தயாரிப்பு உள்ளது.
முன்பு, அனைத்து குடும்பத்திற்கும் இதுதான், தொழிலாக இருந்தது. ஆனால், தற்போதுசில குடும்பங்கள் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் செய்யும் மண்பாண்டங்கள், சூராணம், ஆர்.எஸ்.மங்களம்,தேவிப்பட்டினம் உட்பட பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். சிலஆண்டுகளுக்கு முன்பு, தை மாதம் பிறப்பதற்கு ஒரு மாதத்திற்குமுன்பே, மாட்டு வண்டியில் மண்பாண்டங்களை ஏற்றிக்கொண்டு, அனைத்து ஊர்களுக்கு சென்று, விற்று விடுவோம். ஆனால், மக்களிடையே மண்பாண்டத்தின் முக்கியத்துவம் மறைந்துபோனதால், பின்னாளில் இப்பகுதியில் மண்பாண்டம் தொழில்நலிந்து விட்டது. தற்போது, மக்கள் மண்பானையின்மகிமையை புரிந்து வாங்குதற்கு தயாராகி வருகின்றனர்,என்றார்