பதிவு செய்த நாள்
11
ஜன
2018
12:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன.,18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை(ஜன.,11) தேங்காய் தொடும் முகூர்த்தமும், ஜன.,17ல் அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜையும் நடக்கிறது. ஜன., 18 காலை சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளுவர். காலை 10:00 முதல் 10:20 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றப்படும். திருவிழா நடக்கும் ஜன., 27வரை தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,26 தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து, 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத்தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன.,27 மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு, சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நடைபெறும்.