புதுச்சேரி: புதுச்சேரி செம்பியப்பாளையம் சுந்தர விநாயகர், செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நாளை (14ம் தேதி) அய்யப்ப சுவாமிக்கு, 20ம் ஆண்டு கற்பூரஜோதி பெருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, 14ம் தேதி மாலை 3:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அய்யப்ப சுவாமி முன்புறம் மகா அகண்டத்தில், கற்பூர ஜோதி காண்பிக்கப்படுகிறது. இரவு 7:30 மணியளவில், அய்யப்ப சுவாமி புலி வாகனத்தில் மின் அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.