பதிவு செய்த நாள்
15
ஜன
2018
11:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலையொட்டி சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது. இக்கோயிலில் வழக்கமாக தினம் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து, சுவாமிகளுக்கு படைக்கப்படும். தைப் பொங்கலையொட்டி நேற்று மண்பானையில் பொங்கல் தயாரித்து, மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மடப்பள்ளியில் இருந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின் உற்சவர்கள் சுப்பிரமணி சுவாமி, தெய்வானை முன்பும் படைக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை மண்பாணை பொங்கல் படைக்கப்படும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், மீனாட்சி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், குருவாயூரப்பனுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி பொங்கல் படைக்கப்பட்டது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு பொங்கல் சிறப்பு பூஜை நடந்தது.