பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காவும், அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தியும், நவாஷரி ஹோமம் நேற்று சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் துவங்கி டிசம்பர் 27ம் தேதி வரை காலை மாலை இரு வேளையிலும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி நவக்ரஷ ஹோமம், மாலையில் மருத்துங்கிரணம் ஹோமமும், 23ம் தேதி காலையில் துர்கா ஹோமமும், மாலையில் பிரவேசபல ஹோமமும், 24ம் தேதி மகாமாரி மூலமந்திர ஹோமமும், மாலையில் அங்குரார்ப்பணம் ஏகளாப்ருதனம் ஹோமமும், 25ம் தேதி மகாமாரி மூலமந்திர ஹோமமும், மாலையில் சாந்தி ஹோமமும், 26ம் தேதி காலையில் நவாஷரி முதல் கால ஹோமமும், 27ம் தேதி இரண்டாம் காலம் ஹோமத்துடன் றைவு பெறுகிறது. மதியம் ஒரு மணிக்கு அன்ன தானம் நடக்கிறது. மேலும் மாலையில் லட்சதீபம் ஏற்றும் வைபவமும் நடக்கிறது. இதை தொடர்ந்து அம்மன் தினமும் மாலையில் 21ம் தேதி காமாட்சி அலங்காரத்திலும், 22ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 23ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 24ம் தேதி மகா மாரியம்மன் அலங்கார த்திலும், 25ம் தேதி அன்னபூரணி அலங்காரத்திலும், 26ம் தேதி மகாலெட்சுமி அலங்கார த்திலும், 27ம் தேதி சர்வ அலங் காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கின்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறலையத்துறை, லட்ச திருவிளக்கு கமிட்டி, சிங்கவளநாட்டு கிராமத்தினர் இணைந்து செய்து வருகின்றனர். மேலும் 21ம் தேதி முதல் 27ம் வரை மாலையில் பல்வேறு தவில் வித்வான்களின் இசை கச்சேரிகளும் நடந்து வருகிறது.