பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
மல்லசமுத்திரம்: வையப்பமலை, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 31ல் தைப்பூச சிறப்பு பூஜை நடக்கவுள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை குன்றின் மீது, பாலசுப்ரமணியம் எனும் பெயரில், முருகன் கோவில் உள்ளது. இங்கு, வரும், 31ல் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. காலை, 6:30 மணிக்கு பால்குடம் எடுத்தல், 9:00 மணிக்கு மேல் பல்வேறு அபி?ஷகங்கள், தீபாராதனை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலிப்பார். அன்று சந்திரகிரகணம் என்பதால், மாலை, 4:00 மணிக்கு கோவில் நடை சாற்றப்படும்.