வால்பாறை: வால்பாறை துாய இருதய ஆலய தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை துாய இருதய ஆலய தேர்த்திருவிழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தினமும் மாலை திருப்பலியும், சிறப்பு மறையுரைகளும் நடந்தன. முக்கிய நிகழ்வாக, நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் துாய இருதய ஆண்டவர், வேளாங்கண்ணி மாதா, புனித ஜெபஸ்தியர் ஆகியோர் சொறுபங்கள் தாங்கிய தேர்பவனி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நள்ளிரவில் ஆலயத்தை சென்றடைந்தது.கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமையில், ஆலய பங்கு குரு மரியஜோசப், உதவி பங்கு குரு டேவிட் அலெக்சாண்டர் ஆகியோர் தேர்பவனியை துவக்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.