Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவை., கைலாசநாதர் கோயிலில் ... பொங்கு சனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந் ஜெயந்தி நாளை கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
11:12

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமந் ஜெயந்தி பெருவிழா நாளை 24ம்தேதி கோலாகலமாக நடக்கிறது. கும்பகோணம் ஸ்ரீநகர்காலனியில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகர் திருக்கோவிலினை அடுத்தாற்போல் அனுக்ரக ஆஞ்சநேயர் திருக்கோவில் கொண்டுள்ளார். நாளை 24ம்தேதி அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனுக்ரக ஆஞ்சநேயருக்கு காலையில் மஹாமாலா மந்திர ஹோமமும், காலை 9.45 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதையடுத்து மகாதீபாரதனையும், பின்னர் முற்பகல் 12மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் நாம சங்கீர்த்தனமும், ஜெயலட்சுமி விலாஸ பஜனை சபா குழுவினரின் பக்திப்பாடல்களுடன் ஸ்ரீநகர் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுக்ரக ஆஞ்சநேயர் திருவீதியுலா நடைபெறுகிறது.இரவு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் அளிக்கப்படுகிறது. மாலையில் நடைபெறும் விழாவிற்கு சிட்டியூனியன்வங்கி தலைவர்பாலசுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். ஆஞ்சநேயரின் திருவீதியுலாவை சிட்டியூனியன் வங்கி தலைமை பொதுமேலாளர் மோகன் தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை பிரிமியர் குழுமத்தின் மேலாண் இயக்குனர் சௌந்தரராஜன் செய்துவருகிறார். இதேபோன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அமைந்துள்ள அனுமார் கோவிலில் அனுமத் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 10மணிக்கு விசேஷ மூலவர் உற்சவர் திருமஞ்சனமும், மதியம் 12மணிக்கு பிரசாத வினியோகமும் நடைபெறுகிறது. மாலை ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரமும், இரவு 7மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். *கும்பகோணம் அருகே புளியம்பேட்டை அருகில் உள்ள விஜயலட்சுமி நகரில் அருள்பாலிக்கும் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று தினப்படி பூஜைகளுடன் காலை 7 மணியளவில் சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடக்கின்றது. மாலை வெண்ணைக்காப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மூல நட்சத்திர விழாக்குழுவினர் செய்துஉள்ளனர். இதே போன்று கும்பகோணம் புதுப்பாலம் அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலிலும், கும்பகோணம் சகாஜி தெருவில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar