Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலை வணங்குவதே வேலை குழந்தை வேலாயுதர் கோயில் வரலாறு குழந்தை வேலாயுதர் கோயில் வரலாறு
முதல் பக்கம் » துளிகள்
வரம் தருவாய் வடிவேலா!
எழுத்தின் அளவு:
வரம் தருவாய் வடிவேலா!

பதிவு செய்த நாள்

27 ஜன
2018
04:01

●  உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வடிவேலனே!
குற்றம் பொறுக்கும் குணக்கடலே! சிவகுருநாதனே!  வேண்டும் வரம் தருபவனே! எட்டுத்திக்கையும் அருளாட்சி செய்பவனே! சரவணபவனே! என்னைக் காத்தருள் வாயாக.
●  கயிலைநாதர்பெற்ற தவக்கொழுந்தே! தேன் சிந்தும் கடப்பமாலையை விரும்பி
அணிபவனே! தணிகாசல மூர்த்தியே! கார்த்திகேயனே! சூரபத்மனை ஆட்கொண்ட வீரனே! தேவசேனாபதியே! வள்ளிக்கு வாய்த்தவனே! என் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக.
●  செவ்வேள் பரமனே! விநாயகருக்கு பின் வந்தவனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த தோள்களைக் கொண்டவனே! பன்னிருகை வேலவனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே!
●  திருமாலின் மருமகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தை தந்தருள் வாயாக.
●  மயில்வாகனனே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் காப்பவனே!
●  காங்கேயனே! அறுபடை வீடுகளில் அமர்ந்து அருளாட்சி புரிபவனே! தெய்வானை  
மணவாளனே! நவக்கிரகங்களால் உண்டாகும் தோஷங்களைப் போக்கி இன்பவாழ்வு
அருள்வாயாக.
●  சஷ்டிநாதனே! மண்ணிலும், மரத்திலும், மலையிலும், நெருப்பிலும், நீரிலும், வாகனத் தில் செல்லும்போதும், பாதாள குகையிலும், வேறெந்த இடத்திலும் நான் இருக்கும்போது விரும்பி வந்து காத்தருளவேண்டும். ஒருகணமும் உன்னை மறவாத பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
●  இனியமொழிபேசும்தெய்வா னையின் மன்னவனே! வள்ளிநாயகியின் கரம் பிடித்த வனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! உன்வெற்றிக் கொடியில் இருக்கும் சேவலைக் கூவச் செய்து என் வாழ்வில் நல்ல விடியலை உண்டாக்கு வாயாக.
●  தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் சக்தியுமை பாலனே!
குறிஞ்சியின் முதல்வனே! துன்பம் எல்லாம் போக்கி அன்பர் வாழ்வில் ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த சிவகுருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.
●  வேதத்தின் உட்பொருளே! மனதைக் கவரும் பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரேசனே! அமுதம் போல இனிமை கொண்டவனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு அருள் செய்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

 
மேலும் துளிகள் »
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar