ஈரோடு: சந்திர கிரகணத்தையொட்டி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நடை, வரும், 31ல் அடைக்கப்படுகிறது. அன்றைய தினம், 11:30 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்தவுடன், நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்தவுடன், இரவு, 9:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை, அர்த்தஜாம பூஜை உள்ளிட்ட காலபூஜைகள் வழக்கம் போல் நடக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.