வால்பாறை:வால்பாறை புனித லுாக்கா ஆலய தேர்த்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை புனித லுாக்கா ஆலய தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக வால்பாறை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லுாக்கா ஆண்டவர், வேளாங்கண்ணி மாதா, புனித ஜெபஸ்தியர் ஆகியோர் சொருபங்கள் தாங்கிய தேர்பவனி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நள்ளிரவில் ஆலயத்தை சென்றடைந்தது. முன்னதாக, தேர்பவனியை முடீஸ் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ்சகாயராஜ், புனித லுாக்கா ஆலய பங்கு தந்தை வினித் கருகம்பில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.