காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 04:01
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது. இன்று காலை 4:00 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பெரிய தேரில் சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மனும், சின்ன தேரில் சொர்ணவள்ளி அம்மன் எழுந்தருளினார். 9:30 மணிக்கு மக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. சின்ன தேரை பெண்களே ஆரவாரத்துடன் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.