பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் தைப்பூசம் திருவிழா இன்று நடக்கிறது. இதில், எட்டு கோவில் சுவாமிகள் பங்கேற்கின்றன. கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூசம் திருவிழா இன்று நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள், சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 5.00 மணியில் இருந்து 5.30 மணிக்குள், தீர்த்தவாரி நடக்கிறது. இதில் எட்டுகோவில்களில் இருந்து, சோமாஸ்கந்தர் அம்பாளுடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார்.
இதில் கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார்ஜூனேஸ்வரர். அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வார் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யார்ஜூனேஸ்வரர், திருஈங்கோய் மலை, மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர், வெள்ளுர் சிவகாமி உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் சுவாமிகள் பங்கேற்கின்றன. நாளை காலை, 10:00 மணியளவில் சுவாமிகள் சந்திப்பு, புறப்பாடு நடக்கிறது. இத்திருவிழாவில், கலெக்டர் கோவிந்தராஜ், டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ், எஸ்.பி., ராஜசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குநர் சூரிய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் இ.ஓ.,க்கள், பணியாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கின்றனர்.