Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச திருவிழா: தமிழெடுத்து ... மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனியில் தங்க ரத புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2018
03:01

வடபழனி: முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா களை கட்டி உள்ளது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.தைப்பூசம், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.தை பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக, பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள், தைப்பூசம் என்பர்.தமிழக முருகன் கோவில்களில், பூச நட்சத்திரம், பவுர்ணமி அன்று; பூச நட்சத்திரம் பிறப்பை கணக்கிட்டு; சந்திரகிரஹணம் வருவதால், அடுத்த நாள் என பிரித்து, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.கந்தக்கோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை, குமரன் குன்றம் கோவில், சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், இன்று தைப்பூச விழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் முருகன் கோவில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட பல கோவில்களிலும், தைப்பூசம் களை கட்டியுள்ளது.சென்னை, வடபழனியாண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று இரவு துவங்கி, கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தைப்பூச பால் காவடி சபை சார்பில், இரண்டு நாட்கள் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை, 6:00 மணிக்கு, காவடிகளுக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், மிளகாய் சாந்து அபிஷேகம்; தகட்டில், கடப்பாரை உருவுதல்; மார் மீது கல் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. நாளை வடபழனி ஆண்டவருக்கு சந்தனக்காப்பு, இரும்பர் அபிஷேகம், தங்க ரத புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar