பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவை ஒட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. அதே போல் நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.