பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் மாசித்திருவிழாவை முன்னிட்டு தேர் சக்கரபீடத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. மேல்மலையனுாரில் அங்காளம்மன் கோவிலில் மாசித்திருவிழா, பிப்.,14ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து 20 ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தேர்சக்கரங்கள் மற்றும் பீடத்திற்கு, நேற்று முன்தினம் காலையில் சிறப்பு பூஜை நடந்தது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், மணி, சரவணன், சேகர் ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.