திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் பிடிமண் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 11:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் தைப்பூசத்தை முன்னிட்டு நடந்த மண்மலைத் திருவிழாவில் பிடிமண் பூஜை நடந்தது. இக்கோயிலில்தைப்பூசத்தை முன்னிட்டுஆண்டுதோறும் மண்ணை மலையாக்கும் திருவிழா நடைபெறும். அதில் பிடிமண் பூஜைமற்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். நேற்று மாலை 4:00 மணிக்கு சுப்பிரமணியர் கோயிலிலிருந்து பெண்கள் ஊர்வலமாக குளம்கரை கூத்த அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு கோயில் எதிரிலுள்ள சேங்கையில் பிடிமண் எடுத்தனர். பின்னர் பெண்கள் பிடிமண் தட்டுகளுடன் நகரின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக சுப்பிரமணியர் கோயிலுக்கு வந்தனர்.அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்மலை மைதானத்தில் மண் மலையாகக் குவிக்கப்பட்டு தீபமேற்றி மலைக்கடவுள் முருகனை வழிபட்டனர். தொடர்ந்து மூலவரான வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாட்டினை முருகன் திருக்கோயில் கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்தனர்.