பதிவு செய்த நாள்
05
பிப்
2018
11:02
காஞ்சிபுரம்: கூரத்தாழ்வான், 1,008வது திரு அவதார மகோற்சவத்தின், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. கூரத்தாழ்வானின், 1,008வது மகோற்சவம், கடந்த மாதம், 27ம் தேதி, திருப்பல்லக்கு, ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது. அன்று முதல், காலை, மாலையில், திருப்பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில், கூரத்தாழ்வான் வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று காலை, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், காலை, 8:20 மணிக்கு திருத்தேரில் கூரத்தாழ்வான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறையும், மாலை, 6:00 மணிக்கு, ஹம்ஸ வாகனம் நடைபெற்றன. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.