செஞ்சி:மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் பனியிலும் பக்தர்கள் வந்திருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்தனர்.இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 1 மணிவரை நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் பனியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.கலெக்டர் மணிமேகலை, அங்காளம்மன் கோவில் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, ஆர்.டி.ஓ., பிரியா, அறங்காவலர் குழுத் தலைவர் துரை மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.