பதிவு செய்த நாள்
07
பிப்
2018
01:02
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கெண்டிரங்கமநாயக்கனூர் கிராமத்தில், அருள்பாலித்து கொண்டிருக்கும் மஹா கணபதி, சக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வரும், 19ல், நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு காவேரி புனித தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 17ல், கிராம சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம். 13 அன்று அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 19 அதிகாலை, 4:30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை, 6:00 மணிக்கு மேல் ராஜகணபதி, மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.