பதிவு செய்த நாள்
08
பிப்
2018
04:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார் தலைமையிலான குழு நேற்று ஆய்வு நடத்தியது.மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, ஆய்வு நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தீயணைப்புத்துறைக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். இதையடுத்து, துணை இயக்குனர் சரவணக்குமார் தலைமையில் மதுரை, தேனி, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் தீயணைப்பு அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் அடங்கிய குழு, நேற்று ஆய்வு செய்தது. தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் இருந்து தப்பிய பழைய திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சுவாமி சன்னதி உள்ளிட்டபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின், சரவணக்குமார் கூறியதாவது: தீ விபத்தில் சேதமடைந்தவீர வசந்தராயர் மண்டபம்,அருகில் உள்ள பகுதிகளின் மேற்கூரைகளில்இரும்பு கர்டர்கள் மூலம் முட்டுக்கொடுக்கும் பணிநடந்து வருகிறது. எதிர்காலத்தில், தீ பரவாமல் தடுக்கும் முறைகள், விபத்து நேரிட்டால் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள்சுலபமாக வருவது குறித்து விரிவாக ஆய்வுசெய்யப்படும். தீ விபத்து ஏற்பட்டது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆய்வு நடத்தி அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.