Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு ... பழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : கடந்தாண்டைவிட ரூ.4.5 கோடி அதிகம் பழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாபிராமபுரத்தில் திருத்தணி முருகர் வீதியுலா
எழுத்தின் அளவு:
பட்டாபிராமபுரத்தில் திருத்தணி முருகர் வீதியுலா

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
12:02

திருத்தணி:பட்டாபிராமபுரம் கிராமத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், திருத்தணி முருகப்பெருமான் நேற்று, வீதியுலா வந்ததால், கிராம பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, நேற்று, காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் படிகள் வழியாக நல்லாங்குளம் அருகே வந்தார். தொடர்ந்து, அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த, மாட்டு வண்டியில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, கோவில் சுமைதாரர்கள் மாட்டு வண்டியில், உற்சவர் முருகப் பெருமானை, சித்துார் சாலை, புறவழிச் சாலை, சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை, 11:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தது. அங்கு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இக்கிராமத்திற்கு, 60 ஆண்டுகளுக்கு பின், திருத்தணி முருகப் பெருமான் வீதியுலா வந்ததால், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மதியம் 12:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள குளக்கரையில், புதிதாக சீரமைக்கப்பட்ட மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலா முடிந்தவுடன், உற்சவர் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன், முன்னாள் சேர்மன் ரவி உட்பட திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar