மானாமதுரை:மானாமதுரை அருகே விளத்துாரில் பாலகுருநாதன் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டுயாகசாலை பூஜைகள் முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 2வது நாள் காலை சுதர்சன ஹோமம், நவசக்தி, நவக்கிரக ஹோமங்கள் கோபூஜைகள் நடைபெற்றது. 3வது நாள் மகா பூர்ணாகுதி, தீபஆராதனை,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 4 வது நாள் காலை கும்பாபிேஷகத்தை ஒட்டி காலை 11:25 கடம் புறப்பாடாகி அர்ச்சகர்கள் கும்பத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன மதியம் அன்னதானம்நடைபெற்றது.ஏற்பாடுகளை விளத்துார் கிராம மக்கள் செய்து இருந்தனர்.