Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம் பழநி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப்பிடித்து எரிந்த கோவில் தேர்கள்: பரிகாரமாக வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
தீப்பிடித்து எரிந்த கோவில் தேர்கள்:  பரிகாரமாக வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு!

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
06:02

வேலூர்: சத்துவாச்சாரியில், இரண்டு கோவில் தேர்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், சத்துவாச்சாரியில், பிரசித்திப் பெற்ற சாலை கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடக்கும். இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.   

இந்த கோவிலுக்கு சொந்தமான, தேக்கு மரத்தினால் ஆன தேர் கடந்தாண்டு, 50 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது. கோவில் அருகே நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது இந்த தேரில் சுவாமி திருவீதி உலா வரும்.    இந்த தேரின் அருகில், சத்துவாச்சாரி பொன்னியம்மன்  கோவிலுக்கு சொந்தமான சிறிய தேரும் நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு தேர்களும் ஓலை, பலகையால் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில், இன்று  அதிகாலை, 3:00 மணிக்கு, இரண்டு தேர்களும் திடிரென தீப்பிடித்து எரிந்தன. வேலூர் தீயணைக்கும் துறையினர், பொது மக்கள், போலீசார்  சேர்ந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. வேலூர்  தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.   

நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு இளைஞர்கள் சிலர் பைக்கில் வந்து தேருக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு  மொபைல் போனில் தகவல் வந்த பிறகு, இரண்டு தேருக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்றதாகம், சத்துவாச்சாரி போலீசார் நடத்திய  விசாரணையில் தெரியவந்தது. தேருக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாவட்ட  தலைவர் மகேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:  மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சமூக விரோதிகள் தீ  வைத்தனர். அது போல இங்குள்ள தேர்களுக்கும் சமூக விரோதிகள் தான் தீ வைத்துள்ளனர்.  எனவே, வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து இந்து கோவில்களுக்கும், தேர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினர்.   இரண்டு தேர்கள் தீயில்  எரிந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்களுக்கும் தீ வைக்கப்பட்டது அபசகுணமாக பக்தர்கள் கருதுவதால், தங்கள்  வீடுகளின் முன் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar