சாத்துார்:சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடந்த தை கடைசி வெள்ளிக்கிழமை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதையொட்டி நேற்று அதிகாலை முதல் கோயிலுக்கு பாதயாத்திரையாக , வேன்,கார்கள், பஸ்கள் மூலம் பக்தர்கள் கோயிலுக்குவரத்தொடங்கினர். அதிகாலை , உச்சிகாலம், மாலை நேரங்களில் அம்மனுக்கு மஞ்சள், இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிேஷகம் , பூஜைகள் நடந்தது.பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.பக்தர்கள் பலர் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தினர். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.