Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ... காளியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச கருட சேவை: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

சேலம்: பஞ்ச கருட சேவையில் அருள்பாலித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஆண்டாள் அறக்கட்டளை இளைஞர் குழு சார்பில், 38ம் ஆண்டு, பஞ்ச கருடசேவை, நேற்று, சேலம், கோட்டை வளாகத்தில் துவங்கியது. கோட்டை அழகிரிநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயணர், அம்மாபேட்டை பாவ நாராயணர் உற்சவர்கள், தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி, மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில், உலா வந்தனர்.

இரவு, 7:00 மணிக்கு, கோட்டை வளாக விழா பந்தலை வந்தடைந்த உற்சவர்கள், பஞ்ச கருட சேவையில், அடுத்தடுத்து வரிசையாக அமர்ந்து, ஒருசேர காட்சியளித்தனர். கற்பூர தீபாராதனை செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வரிசையில் நின்று, சுவாமியை தரிசித்தனர். அவர்களுக்கு, துளசி, மஞ்சள், குங்குமம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு, 9:00 மணிக்கு, உற்சவர்கள் வீதியுலா சென்று, கோவிலை சென்றடைந்தனர். கோட்டை அழகிரிநாதர் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை, 6:00 மணிக்கு பரதநாட்டியம், இரவு, 9:00 மணிக்கு சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 11:30 மணிக்குமேல், 2:30 மணிக்குள், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம், விருந்து நடக்கிறது. சுதர்சன பட்டாச்சாரியார் கூறுகையில், திருமணமாகாதவர்கள், தடையை போக்க, பஞ்ச கருட சேவையை தரிசித்தால், சர்ப தோஷம், கால சர்ப தோஷம், கலப்பிர தோஷம் நீங்கி, திருமண வைபவம் கைகூடும். சகல சவுபாக்கியமும் பெறலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
விருதுநகர்; விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. ெரங்கநாதர், ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை யில் ஐப்பசி முதல் நாளும், கடைசி நாளன்றும் தேவகோட்டை கோயில்களிலுள்ள சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar