பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
மாரண்டஅள்ளி: மாரண்டஅள்ளியில், பட்டாளம்மன் கோவில் பண்டிகை நிறைவு விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பட்டாளம்மன் கோவிலில் நடந்த சிடல் பண்டிகை திருவிழாவின் நிறைவு நாள் நேற்று நடந்தது. கடந்த, 5ல் காலை, 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. 11:00 மணிக்கு மேல், அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் சிடல் ஆட்டம், சுவாமி ஊர்வலம் நடந்தது. மாரண்ட அள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இறுதி நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் நராயணசாமி உடையார், கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.