பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
சேலம்: சேலம், சுக்கம்பட்டியிலுள்ள, அங்காள ஈஸ்வரி கோவிலில், மாசாண திருவிழா, வரும், 15ல் நடக்கவுள்ளது. அதையொட்டி, நாளை அதிகாலை, 4:00 மணி முதல், அங்காள ஈஸ்வரி - அருணாச்சல ஈஸ்வரருக்கு அபி?ஷகம், அலங்காரம் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு மேல், சுவாமிகளுக்கு திருமணம் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 15 காலை, 8:00 மணிக்கு மேல், ஆவேசக்காரி மயான கொள்ளைக்கு புறப்படுதல், மருலாடி கோழி கடித்தல், குட்டி கடித்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.