பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவிலில், குடமுழுக்கு நடந்து, 12 ஆண்டு முடிந்துள்ளது. வரும், மே மாதம் குடமுழுக்கு நடத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோபுரம் வர்ணம் பூசுதல், மராமத்து வேலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கோவில் விமானங்களுக்கு, நாளை காலை, 10:45 மணி முதல், 11:45 மணிக்குள், மேஷ லக்னத்தில், பாலஸ்தாபனம் (கலாகர்ஷணம்) செய்யப்படவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும், கலந்து கொள்ள வேண்டும். இத்தகவலை கோவில் விழா கமிட்டி தலைவர், காளியப்பன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் வாசவி பிரபுகாந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.